January 29, 2011

இசையானவள்

இசையாக நீயிருந்தாய்  என் 
இரு செவி உட்புகுந்தாய்
இமை நடுவில் குடியிருந்து
இமை மூட தடையிருந்தாய்

கனவாக நீ இருந்தாய்  என்
கற்பனைக்கு உயிர் கொடுத்தாய்
கரம் பிடிக்க எண்ணி வந்தேன்
"நான் கன்னியல்ல கனவு " என்றாய்

இரவோடு ஒளி வீசும் தாரகையாய்
உன்  கண்கள் .
தாரகையை தோற்கடிக்கும் தன்மதியாய்
பிறை வதனம்
மதி மூடும் மலர் மஞ்சு தனை ஒத்த
கருங்கூந்தல்
நின் மனதோடு நான் இருந்தால்
பகலெல்லாம் பௌர்ணமிகள்

மாமன்னன் வாள் இணைய
கூறிய நின் நாசி
என் பசி மயக்கம் தீர்த்துவைக்க
சொல்லாயோ ஒரு சேதி

உலகத்து அழகையெல்லாம்
ஒரு வட்டில் வடித்தெடுத்து
உறை குத்தி கடைந்தெடுத்த
அமிர்தமாய் உன் உதடு
என் உயிர் உறைய வைக்குதடி
உறையிட்டு அதை மூடு

வளைவற்ற ஆடி யாய்
உண்டங்கே ஓர் கழுத்து
முகம் பார்க்க முயன்றாலோ
வழுக்கி விடும் தலையெழுத்து

மாறன் அம்புகளாய் வம்பு
செய்யும் வம்பிரண்டு
கோயில் கலசமாய்
வடிவெடுத்த பெண்ணழகு

இல்லாத இடை காட்டி
இம்சிக்கும் வஞ்சி
அவள் சொல்லடா மாட்டளோ
எனை கொஞ்சம் கொஞ்சி

இளம் காலை நேரத்து
தென்றலாய் தேகம்
இலையுதிர் காலத்து
மரமானேன் நானும்

இதமான குளிர் நேர
தேநீரும் நீதான்
எனை இரவோடு
முனகவைத்த
முகாரியும் நீதான்

உன் இதமான பார்வை போதும்
இம்மையிலும் மோட்சமடி
உன் இதழ் வார்த்தை போதுமடி
என் உயிர் பிரியும் உனதடியில்

January 13, 2011



வணக்கம் நண்பர்களே !
நான் வைஷு .இது எனது முதல் வலைப்பதிவு .
அபரஞ்சி..... "அபரஞ்சி "என்றால் புடம் போடப்பட்ட
பொன் என்று அர்த்தப்படும் . பொன் எவ்வளவு விலைமதிப்பற்றது .
அதுவும் புடம் போடப்பட்ட பொன்னின் தரம் நீங்களே ஊகியுங்கள் ..
இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எனது படைப்புக்களை அளிக்கும்
நோக்கத்துடன்
                 _ நான்
                      உங்கள் வைஷு